search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதி ஒதுக்கீடு"

    • பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்க சுற்றுப்பயணம் மேற் கொள்ளப்பட்டது.
    • 3 ஒன்றிய பகுதிகளில் 28.525 கி.மீ. நீளத்திற்கு சாலை மேம்பாட்டுப்பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு

    நாகர்கோவில் :

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகஸ் தீஸ்வரம், தோவாளை, ராஜாக்கமங்கலம் ஒன்றிய பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்க சுற்றுப்பயணம் மேற் கொள்ளப்பட்டது. அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளையும், பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்தனர். குறிப்பாக சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வ தற்கு அரசிடம் நிதி ஒதுக்கீடு பெற்று இந்த பணிகளை விரைவாக முடித்து மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.

    இதன் அடிப்படையில் ஒன்றிய பகுதிகளில் கிராம பஞ்சாயத்து சாலை, ஒன்றிய சாலை பணிகளை மேற் கொள்வதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்ய ஊரக வளர்ச்சித்துறை அமைச்ச ருக்கும், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் மற்றும் மாவட்ட கலெக்ட ருக்கு பரிந்துரை செய்யப் பட்டது. இதனை ஏற்று அரசு அகஸ்தீஸ்வரம், தோவாளை, ராஜாக்கமங்கலம் ஒன்றியப் பகுதிகளில் சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ரூ.10 கோடியே 52 லட்சத்து 68 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    அகஸ்தீஸ்வரம் ஒன்றியப் பகுதியை சேர்ந்த பாட்டுக்குளம் முதல் ஆரோக்கியபுரம் கடற்கரை சாலை 1.370 கி.மீ. நீளத்திற்கு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ரூ.49 லட்சத்து 80 ஆயிரமும், ஆம ணக்கன்விளை பள்ளி எதிர்புறம் முதல் தேசிய நெடுஞ்சாலை வரை சாலை மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ரூ.15 லட்சத்து 20 ஆயிரமும், ஹரிதாசபுரம் சாலையை சீரமைக்க ரூ.10 லட்சமும், லீபுரத்தில் உள்ள லெட்சுமிபுரம் சாலையில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ரூ.40 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்றியத்தில் உள்ள பிற சாலைகளும் சீரமைக்கப்பட உள்ளது.

    இதைபோன்று தோவாளை ஒன்றியப் பகுதியை சேர்ந்த பாலமோர் ரோடு முதல் இறச்சகுளம் சாலை பாலமோர் ரோடு முதல் அருள் ஞானபுரம், மந்திரக்கோணம் சாலை, சங்கரலிங்கம் பாறை சாலை, காட்டுப்புதூர்-பரமனக் கோணம் சாலை, வீரவ நல்லூர் முதல் அனந்தனார் கால்வாய் சாலை, அண்ணாநகர் அருமநல்லூர் சாலை, சீதப்பால் பாலம் முதல் மண்ணடி சாலை, திருமலைபுரம் சாலை, பாலமார்த்தாண்டன் புதூர் ஆசிரியர் காலனி சாலை போன்றவை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மேலும், ராஜாக்கமங்கலம் ஒன்றியப் பகுதியை சேர்ந்த பொழிக்கரை கிராமச்சாலை, வெள்ளமோடி விளை சாலை, தெங்கம்புதூர் பள்ளம்துறை சாலை என மொத்தம் 3 ஒன்றிய பகுதிகளில் 28.525 கி.மீ. நீளத்திற்கு சாலை மேம்பாட்டுப்பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • செல்வநாயகபுரத்தில் குடிநீர் கிணறு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • முதுகுளத்தூர் யூனியன் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் யூனியன் கவுன்சில் கூட்டம் சேர்மன் சண்முகப்பிரியா ராஜேஸ் தலைமையில் நடந்தது. துணை தலைவர் கண்ணகி முன்னிலை வகித்தார். ஆணையாளர் ஜானகி வரவேற்றார். கவுன்சிலர் முருகன் (அ.ம.மு.க.) செல்வநாயகபுரம் கிராமத்திற்கு குடிநீர் கிணறு அமைக்க நிதி வழங்கிய யூனியன் தலைவருக்கு நன்றி தெரிவித்தார். கலைசெல்வி ராஜசேகர் (வெங்கலக்குறிச்சி) வெண்ணீர்வாய்க்கால் பள்ளி சாலையை பேவர் பிளாக் சாலையாக அமைக்க கோரிக்கை விடுத்தார். மேலும் விளங்குளத்தூர் உயர்நிலைப்பள்ளிக்கு சுற்று சுவர் அமைக்கவும் கோரிக்கை விடுத்தார்.

    • புதிதாக மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாடு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
    • ஒரு புதிய நூலக வளாகம் ரூ.30 லட்சம் மதிப்பில் இயக்கப்படும்.

    கோவை,

    கோவை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

    கோவை மாநகராட்சி கவுன்சிலர்களிடம் அவரவர் வார்டுகளில் உள்ள பொதுமக்கள் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாகவும், மக்களுக்கான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள புதிதாக மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாடு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

    இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு உறுப்பினருக்கு தலா ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ள ப்படும்.

    கோவை மாநகராட்சயில் 17 மேல் நிலைப்பள்ளிகள், 10 உயர் நிலைப்பள்ளிகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இதற்கு என ரூ.50 லட்சம் மதிப்பில் மாநகராட்சி பள்ளிகளில் சி.சி.டி.வி காமிரா பொருத்தப்படும்.

    மாநகராட்சி மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரமான சுத்தமான குடிநீர் வழங்கும் விதமாக அனைத்து பள்ளிகளிலும் நவீன குடிநீர் சுத்திகரிப்பு கருவி ரூ.1 கோடியில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள நவீன சுத்திகரிப்பு கருவிகளை ரூ.20 லட்சம் செலவில் வருகிற கல்வியாண்டில் பழுதுபார்த்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    பொது அறிவை மேம்படுத்தவும், வசதியற்றோர் மற்றும் மூத்தகுடிமக்கள் பயன்பெறும் வகையில் மாநகராட்சியில் 2022-23-ம் ஆண்டில் ஒரு பிரத்யேக மக்களை தேடி நூலகம் இயக்கப்பட்டு இதுவரை 4800 மாணவர்கள் மற்றும் 440 பொதுமக்கள் பயன் பெற்றுள்ளனர்.

    இது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளதால் இந்த நிதியாண்டில் கூடுதலாக ஒரு புதிய நூலக வளாகம் ரூ.30 லட்சம் மதிப்பில் இயக்கப்படும்.

    மாநகராட்சி பள்ளிகளில் 12 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவர்களில் பள்ளி இறுதி பொதுத்தேர்வில் குறைந்தபட்சம் ஒரு பாடத்தில் 100 விழுக்காடு மதிப்பெண்கள் பெரும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதேபோல மாநகராட்சி பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற செய்யும் வகுப்பின் ஆசிரியர்களுக்கும் ரூ.5 ஆயிரம் ஊக்க தொகையாக வழங்கப்படும்.

    மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்களின் போதும், மேயரின் கள ஆய்வின் போதும் பொதுமக்களை கூறப்படும் குறைகளை சரி செய்யும் விதமாக மாண்புமிகு மேயர் விருப்ப நிதி இந்த நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்படும். இதற்கென இந்த நிதியாண்டில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் இடம் பெற்றுள்ளது.

    • திப்பணம்பட்டி முதல் அரியப்புரம் வரையிலான சாலை மிகவும் சேதமடைந்து காணப்பட்டது.
    • சாலைகளை தரம் உயர்த்துதல் பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் திப்பணம்பட்டி முதல் அரியப்புரம் வரையிலான சாலை மிகவும் குண்டும் குழியுமாக சேதமடைந்து காண ப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    இந்நிலையில் புதிய சாலை அமைத்திட கோரி பொதுமக்கள் கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்திலும், மாவட்ட கலெக்டரிடமும் மனுக்கள் வழங்கி வந்தனர். தற்போது அங்கு புதிய சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை கூறுகையில்,

    இந்த சாலையானது கடந்த ஆண்டு ஊராட்சி ஒன்றிய சாலையில் இருந்து நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன், ஒவ்வொரு முறை சென்னை செல்லும் போதும் இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வே.வேலுவை சந்தித்து பேசினர்.

    அதன் பலனாக சேதமடைந்த சாலைகளை தரம் உயர்த்துதல் பணிகளுக்காக அரசு ரூ.4கோடியே 41 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கீடு பெற்றுத் தந்த தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதனுக்கும், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரைக்கும் நன்றி என தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    மேலும் திப்பணம்பட்டி, நாட்டார்பட்டி, அரியப்புரம், பூவனூர் பொதுமக்கள் சார்பாக, தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன், கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, கீழப்பாவூர் ஒன்றிய குழு தலைவர் காவேரி சீனித்துரை ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்னும் ஓரிரு நாட்களில் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வடக்கு வீதியில் எரிவாயு தகன மேடை அமைத்திட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்–பட்டுள்ளது.
    • பணியை தி.மு.க துணை செயலாளர் துரைமுருகன், பாபநாசம் பேரூர் தி.மு.க செயலாளர் கபிலன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    பாபநாசம்:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி, தமிழக நகர் புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம் பரிந்துரையின் பேரில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் வடக்கு வீதியில் எரிவாயு தகன மேடை அமைத்திட ரூ.1 கோடியே 42 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்–பட்டுள்ளது.

    வடக்கு வீதியில் நடைபெற்று வரும் எரிவாயு தகன மேடை கட்டமைப்பு பணிகளை தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க துணை செயலாளர் துரைமுருகன், பாபநாசம் பேரூர் தி.மு.க செயலாளர் கபிலன் ஆகியோர் பார்வையிட்டனர்.

    அப்போது மாவட்ட பிரதிநி அறிவழகன், பேரூர் துணை செயலாளர் உதயகுமார், பேரூர் பொருளாளர் கிருஷ்ண மூர்த்தி, ஒன்றிய பிரதிநி பாஸ்கர், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் மைக்கேல் ராஜ், ம.தி.மு.க. பேரூர் செயலாளர் சம்பந்தம், முன்னாள் கவுன்சிலர் விஜி, ஆகியோர் உடன் இருந்தனர்.

    • திருவள்ளூர்-புத்தூர் கோட்டம் நிரம்பியதால் கூடுதல் சரக்குகளை கையாள முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு 143.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரெயில் வழித்தடம் அமைக்கப்படுகிறது.

    சென்னை:

    மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் புதிய வழித்தடங்களில் ரெயில் பாதை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் புதிதாக 9 வழித்தடங்களில் ரெயில் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. ரூ.1057 கோடி செலவில் இந்த பாதைகள் அமைக்கப்படுகிறது.

    சென்னை எண்ணூர் துறைமுகமான அத்திப்பட்டில் இருந்து ஆந்திர மாநிலம் புத்தூருக்கு 88 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக பட்ஜெட்டில் ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகா, ஆந்திரா மற்றும் எண்ணூர் துறைமுகத்துக்கு இரும்பு தாது மற்றும் நிலக்கரி கண்டெய்னர்களை கொண்டு செல்ல அத்திப்பட்டு-புத்தூர் வழித்தடம் அவசியமாகும்.

    தற்போது திருவள்ளூர்-புத்தூர் கோட்டம் நிரம்பியதால் கூடுதல் சரக்குகளை கையாள முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு 70 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரெயில்பாதை அமைக்கப்படுகிறது.

    இதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் திண்டிவனம்-திருவண்ணாமலை இடையே 8 ரெயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    திண்டிவனத்தில் இருந்து ஆரணி, வாலாஜா வழியாக நகரிக்கு 180 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரி வழியாக கடலூருக்கு 155 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் நிலம் கணக்கெடுப்பு பணிகள் முடிக்கப்பட உள்ளது.

    மேலும் மொரப்பூரில் இருந்து தர்மபுரிக்கு 36 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய வழித்தடம் அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

    ஈரோட்டில் இருந்து பழனிக்கு 91 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு 143.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரெயில் வழித்தடம் அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.114 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.57.9 கோடி ஒதுக்கப்படுகிறது. ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு 17.2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட உள்ள புதிய ரெயில் பாதைக்கு ரூ.385.9 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த புதிய ரெயில் பாதைகள் மாமல்லபுரம், புதுச்சேரி, ராணிப்பேட்டை, கடலூர், திருவண்ணாமலை, தர்மபுரி மற்றும் தனுஷ்கோடியை தமிழகத்தின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும்.

    மேலும் தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நேரடி ரெயில் இயக்குவதற்கும் வழிவகுக்கும்," என்றார்.

    • கொட்டாம்பட்டியில் புதிய பஸ் நிலையம் கட்ட ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி மந்தை தெற்கு தெருவில் பகுதி நேர ரேசன் கடை மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கொட்டாம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.என்.எஸ்.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கொட்டாம்பட்டி கூட்டுறவு சங்க பதிவாளர் பரமசிவம் வரவேற்றார். கூட்டுறவு சங்கங்களின் மதுரை மண்டல இணை பதிவாளர் குருமூர்த்தி முன்னிலை வகித்தார்.

    இதில் வெங்கடேசன் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பகுதி நேர ரேசன் கடையை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். இதை தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.1000 ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை, முழுகரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார்.

    அப்போது அவர் பேசுகையில், கொட்டாம் பட்டி பகுதி வளர்ச்சிக்கு தனி கவனம் செலுத்தி வருகிறேன். இங்கு புதிய பஸ் நிலையம் அமைக்க முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். அதன்படி புதிய பஸ் நிலையத்திற்கு ரூ.5 கோடி அரசு ஒதுக்கி உள்ளது என்றார்.

    மேலும் கொட்டாம்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமை எம்.பி. தொடங்கி வைத்தார். இதில் 2400 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க மாவட்ட துணை பதிவாளர் ராஜேந்திரன், மாவட்ட வழங்கல் அலு வலர் முருகேஸ்வரி, மேலூர் மேலாண்மை இயக்குனர் பாரதிதாசன், கொட்டாம்பட்டி கூட்டு றவு சங்கத் தலைவர் வெங்கடாசலம், மேலூர் வட்ட வழங்க அலுவலர் அரவிந்தன், தும்பைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் அயூப்கான், கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவ லர் அன்பரசன், கொட்டாம்பட்டி ஊராட்சி செயலர் சிவராமகிருஷ்ணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • தரை மட்ட குடிநீர் தொட்டி அமைத்து அப்பகுதியில் குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும்.
    • நகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகள் செய்து பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் துரிதமாக மேற்கொள்ள முடியும்.

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சி சாதாரணக் கூட்டம் தலைவர் கவிதாமணி ராஜேந்திரகுமார் தலைமையில் நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. ஆணையாளர் விநாயகம் முன்னிலை வகித்தார்.இதில் துணைத்தலைவர், நகர்மன்ற உறுப்பினர்கள்,உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் பேசியதாவது:-

    ராஜசேகரன்(திமுக): தமிழக மக்களின் விரும்பத்தின் பேரில் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கும், அமைச்சரவையில் இடம் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

    ஈஸ்வரமூர்த்தி (காங்கிரஸ்): தமிழக அரசிடம் இருந்து அதிக நிதி ஒதுக்கீடு பெற்று மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து பல்லடம் நகராட்சியை முதன்மை நகராட்சியாக மாற்ற வேண்டும்.

    கனகுமணி துரைக்கண்ணன்(அதிமுக): ராயர்பாளையம் மேல்நிலை குடிநீர் தொட்டியில் தண்ணீர் சரிவர ஏறுவதில்லை. அதனால் அப்பகுதியில் தரை மட்ட குடிநீர் தொட்டி அமைத்து அப்பகுதியில் குடிநீர் விநியோகத்தை சீரமைக்க வேண்டும். அது வரை அண்ணா நகர், பனப்பாளையம் குடிநீர் மேல்நிலை தொட்டியில் இருந்து தண்ணீர் பெற்று ராயர்பாளையம் பகுதி மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்திட வேண்டும். ராயர்பாளையம்,பனப்பாளையம் பகுதியில் உள்ள மினி உயர்மின் கோபுர விளக்குகள் எரிவதில்லை.

    ருக்மணி சேகர் ( திமுக):- தீர்மான பொருள் 2ல் நகராட்சி வார்டு எண் 16 பனப்பாளையம் பகுதி என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால், அது 8-வது வார்டு பகுதியில் உள்ளது. எந்தப் பகுதி, எந்த வார்டில் உள்ளது என்பது கூட நகராட்சி நிர்வாகத்திற்கு தெரியாதா, பனப்பாளையம் பகுதிகளில், தெரு விளக்குகள் எரிவதில்லை, குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது.

    சசிரேகா(பா.ஜ.க): நகராட்சி சொத்து வரி உயர்வால் பொதுமக்கள் பிச்சை எடுத்து செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர் என்பதை உணர்த்தவே மண் சட்டி எடுத்து வந்து இருப்பதாக கூறினார். அதற்கு திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ஜ.க. ஆட்சியின் கியாஸ் சிலிண்டர், பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் நாடு முழுவதும் மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்று உரக்க சத்தமிட்டனர்.

    பாலகிருஷ்ணன்(திமுக): வரி இனங்கள் நிலுவை வைத்துள்ளவர்களின் வீடுகளுக்கு தினந்தோறும் சென்று வரி பணத்தை வரி வசூல் மையத்தில் செலுத்த பணியாளர்கள் சொல்லி வருவதால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். மென்மையான முறையில் கால அவகாசம் அளித்து வரி வசூல் செய்ய வேண்டும். இலக்கை எட்ட வரி வசூல் செய்யக் கூடாது.

    விநாயகம்(ஆணையாளர்): நகராட்சி பகுதியில் 62 சதம் சொத்து வரியும் மொத்தமாக 56 சதம் அனைத்து வரி இனங்களும் நிலுவையில் உள்ளது. அதனால் தான் வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் நகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகள் செய்து பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் துரிதமாக மேற்கொள்ள முடியும்.

    இந்த கூட்டத்தில், பல்லடம் நகராட்சி பகுதியில் உள்ள சொத்துக்களை கிரையம், செட்டில்மெண்ட் மற்றும் இதர ஆவணங்கள் மூலம் பத்திர பதிவு மேற்கொள்ளும் போது சொத்து விபரத்தில் அதன் சொத்து வரி விதிப்பு எண்,குடிநீர் கட்டண இணைப்பு எண் மற்றும் காலியிட வரி விதிப்பு எண் ஆகியவற்றை குறிப்பிட்டும் நடப்பு தேதி முடிய சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணத் தொகைகளை செலுத்தியுள்ளதை உறுதி செய்தும் அதற்கான ரசீது நகலுடன் பத்திர பதிவு மேற்கொள்ள பல்லடம் சார்பதிவாளரை கேட்டுக்கொள்ளுதல் உள்ளிட்ட 81 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • அணைக்கட்டு ஒன்றிய குழு கூட்டம் நடந்தது
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் தலைவர் பாஸ்கரன் தலைமையில் நேற்று நடந்தது.

    மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் மு.பாபு, ஒன்றியக் குழு துணை தலைவர் சித்ரா முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரன் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் 15-வது நிதிக்குழுவில் இருந்தும், பொது நிதியிலிருந்தும் தலா ஒரு கவுன்சிலருக்கு ரூ. 8.40 லட்சம் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வ தற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு ஒன்றிய கவுன்சிலர்கள் முன் அறிவித்தார்.

    அதன்படி 26 கவுன்சிலர்களுக்கு மொத்தம் ரூ.2 கோடியே 18 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

    15-வது நிதி குழுவில் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.3.40 லட்சத்தை ஒன்றிய கவுன்சி லர்கள் ஊராட்சிகளில் உள்ள பள்ளிகளின் கழிப்பறை, சத்துணவு மையம், பள்ளிக்கூடம் உள்ளிட்ட புதுப்பிக்கும் பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
    • நிகழ்ச்சியில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு 160-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெற்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சிக்குட்பட்ட வெட்டுமணி ஒய்.எம்.சி.ஏ. கலையரங்கில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெறும் தீர்வுதளம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும் அந்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்ட நெடுஞ்சாலைத் துறைக்கென ரூ.165 கோடியும், பழுதடைந்த நெடுஞ்சாலைகளை சீரமைப்பதற்காக ரூ.15 கோடியும் நிதி ஒதுக்கீடு பெற்று பணிகள் நடைபெற்று வருகிறது. ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி சாலைகளை சீரமைப்பதற்கென ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்திற்குட்பட்ட திருக்கோவில்களை சீரமைப்பதற்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கியிருந்த நிலையில் தற்போது அந்த குப்பைகளை படிப்படியாக அகற்றிவருவதோடு, பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்றுவதற்கு பல்வேறு முன்னெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்தை குப்பையில்லா மாவட்டமாக மாற்றிட பொதுமக்கள் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்க தலைவர் அல்அமீன், செயலாளர் கார்த்திகேயன் முதல் மனுவை கொடுத்தனர். மனுவில், மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலையை முழுமையாக தார் போட்டு சீரமைத்து அனைத்து பஸ்களையும் இயக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

    நிகழ்ச்சியில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு 160-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெற்றனர்.

    • தொழிற்சாலை, வணிகம், சிறப்பு கட்டிடம், நட்சத்திர ஓட்டல் ஆகியவற்றிற்கு புதிய வரி விதிக்கப்பட்டது.
    • 85 இருசக்கர வாகனங்கள், 95 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் நிறுத்துமிடம் அமைக்க ரூ.52 லட்சம் நிதி ஒதுக்கீடு உள்பட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கோவை,

    கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள விக்டோரியா அரங்கில் கவுன்சிலர்கள் கூட்டம் இன்று நடந்தது.

    கூட்டத்துக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். துணை மேயர் வெற்றி செல்வன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் 2022-23 முதலாம் அரையாண்டு முதல் சொத்து வரி விதிக்க மண்டல அடிப்படையில் ஏ.பி.சி.டி. என 4 பிரிவுகளாக பிரித்து குடியிருப்பு, கல்வி நிறுவனம், தொழிற்சாலை, வணிகம், சிறப்பு கட்டிடம், நட்சத்திர ஓட்டல் ஆகியவற்றிற்கு புதிய வரி விதிக்கப்பட்டது.

    மாநகராட்சியில் உள்ள குப்பை கொட்டும் வாகனங்களை சுத்தம் செய்வதற்கு ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீடு, வடக்கு மண்டலத்தில் ஆழ்குழாய் திறந்தவெளி கிணறுகளை பராமரித்தல், ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், குடிநீர் கசிவுகளை சரி உள்ளிட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அரசு தொடக்கப் பள்ளிகளில் 1-5 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தின் படி கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள 62 தொடக்கப் பள்ளியில் படிக்கும் 7255 மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு.

    மேலும் மாநகராட்சி பள்ளிகளில் கழிப்பிடம் மாமரத்து செய்தல், கூடுதல் கட்டிடங்கள் கட்டுதல், கழிப்பிடங்கள் கட்டுதல், பழைய கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு. தேவாங்கப்பேட்டை மாட்டு தொழுவத்தில் 85 இருசக்கர வாகனங்கள், 95 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் நிறுத்துமிடம் அமைக்க ரூ.52 லட்சம் நிதி ஒதுக்கீடு உள்பட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் தீர்மானம்
    • பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு தலைமை தாங்கினார்.துணைத்தலைவர் கிருஷ்ணவேணி, செயலாளர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    மேலும் திட்ட பணிகளுக்கு ஒப்புதல் அளித்த உடனே பணிகளை தொடங்க வேண்டும். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும.

    அணைக்கட்டு மற்றும் பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனுமதி வழங்க வேண்டும். சிமெண்டு தளத்துடன் கூடிய கழிவுநீர் கால்வாய் பேவர் பிளாக் சாலை அமைக்க மொத்தம் ரூ.32 லட்சத்து 26 ஆயிரம் பல்வேறு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்வது உள்பட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    ×